மொராக்காவோவில் சண்டை போடவிருக்கிறார் ஜீவா..!
பிரபல ஒளிப்பதிவாளரான ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா மற்றும் துளசி இணைந்து நடித்துவரும் திரைப்படமான யான் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் சில பாடல் காட்சிகள் மொராக்காவோவில் படமாக்கப்படவுள்ளன.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகிவரும் இத்திரைப்படத்தினை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம்
தயாரித்துவருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையைத்துவருகிறார்.
பிரகாஷ்ராஜ், நாசர், பிரேம்ஜி அமரன், தம்பி ராமைய்யா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துவரும் இத்திரைப்படத்தின் பல காட்சிகள் சென்னை, மும்மை மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே படமாக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய சில சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் மொராக்கோவில் படமாக்கப்படும்.
இக்காட்சிகளைப் படமாக்க படக்குழு மொராக்கோ செல்லவிருக்கிறது. மொராக்காவோவில் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் விரைவில் திரைப்படம்
வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment